ETV Bharat / city

பொதுமக்களுக்கு எச்சரிக்கை - பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்..!

author img

By

Published : Mar 31, 2022, 4:34 PM IST

ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணோடு இணைப்பதற்கு இன்றைய தினமே கடைசி நாள் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பான்கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைப்பெற்று வந்தன. இதனையடுத்து பலமுறை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமானவரித் துறையினர் நீட்டித்துக்கொண்டே சென்றனர்.

இந்த நிலையில் இன்றுடன்(மார்ச்.31) பான் கார்டு எண்ணுடன் -ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும்; அது போன்று இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(மார்ச்.30) மாலை வருமான வரித்துறையின் உயரிய அமைப்பின் மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், 'இன்றுடன் பான் கார்டு எண்ணுடன் - ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் எண் செயல் இழந்துவிடும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் இணைப்பவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகு இணைத்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு - சசிகலா தரப்பு விசாரணை நிறைவு

பான்கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைப்பெற்று வந்தன. இதனையடுத்து பலமுறை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமானவரித் துறையினர் நீட்டித்துக்கொண்டே சென்றனர்.

இந்த நிலையில் இன்றுடன்(மார்ச்.31) பான் கார்டு எண்ணுடன் -ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும்; அது போன்று இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(மார்ச்.30) மாலை வருமான வரித்துறையின் உயரிய அமைப்பின் மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், 'இன்றுடன் பான் கார்டு எண்ணுடன் - ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் எண் செயல் இழந்துவிடும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் இணைப்பவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகு இணைத்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு - சசிகலா தரப்பு விசாரணை நிறைவு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.